Wednesday, March 25, 2009

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள், எப்போ தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் இந்த தேதிய சொல்லமுடியும். ஏன்னா என்னோட பொறந்த நாளுல தான் இந்த காலேஜ்ல கால எடுத்து வச்சேன்.
காலேஜ் அட்மிஷன் போட்டுட்டு, ஹாஸ்டல்லயும் போய் ஒரு துண்டைப் போட்டு எடத்தைப் புடிசாச்சு.
முதல் நாள் inauguration function, கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தேன். பின்ன வாட்ச்மேன்ல இருந்து பக்கத்து சீட்ல உக்காந்திருந்த பொண்ணுவரைக்கும் எல்லாரும் இங்கிலிஷ்ல என்ன கிழிச்சா நான் மிரளாம என்ன செய்ய? நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஷ் வாட் இஸ் யுவர் நேம் தான்.
நேரம் ஆக ஆக நாம இருக்குறது தமிழ்நாட்டுலயா இல்ல வேற எங்கயாவதானு கொஞ்சம் சந்தேகமாதான் இருந்தது. கல்லூரியோட வரலாறு புவியியல்ன்னு எல்லாத்தையும் சொன்னதுக்கப்புறம் சீனியர்ஸ் பாட்டெல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தாங்க... ஆனா மருந்துக்குகூட ஒரு தமிழ் பாட்டு போடல. இந்த அக்கப்போர்ல இருந்து தப்பிச்சு ஒரு வழியா ஹாஸ்டல் ல போய் விழுந்தாச்சு.
சாயந்திரம் எல்லரோட அம்மா அப்பால்லாம் கிளம்புனாங்க...மத்த புள்ளைங்க எல்லாரும் ஏதோ கல்யாணமாகி போற மாதிரி கண்ணுல தண்ணியோட டாடா பைபை சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம கண்ணுல அப்பிடி தண்ணி ஏதாவது தெரியுதான்னு அம்மாவும் அப்பாவும் உத்து பாத்தும் அப்படி ஒண்ணும் தெரியல போல.. ரொம்ப சோகமா, அப்போ நாங்க கிளம்புறோம்ன்னு சொன்னாங்க... சரி டாடா பைபை சொல்லிட்டு ரூம்க்கு வந்தா எல்லாரும் கண்ணெல்லாம் வீங்கி உக்காந்துட்டு இருந்தாங்க....சரி இங்க நம்மள மாதிரி ஊர்க்கார புள்ளைக தான இருக்கும்ன்னு நம்பி பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துவச்சிட்டு கட்டில்ல உக்காந்தா ஒரு கொரலு.... "ஹாய் கேல்ஸ் ஐ அம் நிஷா" என்றது.. 
என்கிட்ட கேக்காமலே அந்த ரூம்ல புது சட்டம் இனிமே இங்கிலிஷ்ல தான் பேசணும்னு, அப்போதான் கடைசி வருஷம் கேம்பஸ் வரும் போது நல்லா பேச முடியுமாம்... அட பாவிங்களா நான் எவ்ளோ நாள் தான் மௌன விரதம் இருக்குறது...., அப்போதான் தெரிஞ்சது நம்மள தவிர எல்லாரும் இங்கிலிஷ் மீடியம்னு...
நான் முழிக்கிறதப்பாத்து பக்கத்துல இருந்த மதுரக்கார புள்ள, பயப்படாத இது எல்லாம் ரெண்டு நாளைக்கு கூட யாரும் பேச மாட்டாங்க என்றதும் தான் திரும்ப பொட்டிய கட்டலாம்ன்ற எண்ணத்த மாத்திகிட்டேன்.
அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஒரு நாள் கூட யாரும் இங்கிலிஷ் ல பேசல. அங்கே பாதி பேர் பேசினத பாத்தப்போ அண்ணாமலை படத்துல ஜனகராஜ் சார் பேசுற இங்கிலிஷ் தான் நியாபகம் வந்தது. நம்மளும் இங்க வண்டிய ஓட்டிடலாம்ன்னு நம்பிக்கையும் வந்தது. இருந்தாலும் பீட்டர் விட்டு பழக்கம் இல்லாததால கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது.

இனி நாங்க கேங் சேத்துகிட்டு பண்ணுன லொள்ளுஸ் எல்லாம் வேற பதிவுல சொல்லுறேன்.

Thursday, March 5, 2009

பாப்பா கதைகள்

வாங்க பாப்பா கதைகள்ல இருந்து நாம ஆரம்பிக்கலாம்...

இந்த கதைல வர பாப்பா உண்மைலேயே இருக்கா இல்லையானு சிந்திச்சு டைம் வேஸ்ட் பண்ணாம கதைக்குள்ள போய்டலாம்.

இந்த வாரம் நாம பாக்க போறது:

பாப்பாவும் மாமா கல்யாணமும்:

நம்ம பாப்பாவுக்கு வார்த்தை மாறினா சுத்தமா புடிக்காது. அப்பிடி மாறினவங்கள ஒரு தடவையாவது மன்னிப்பு கேக்க வச்சு ஒரு லாலி பாப் வாங்கிடுவா... பாப்பாவுக்கு வயசு என்னவோ ரெண்டரை தான் ஆகுது. ரொம்ப நாளா பாப்பாக்கும் மேக்கப் போட்டு அலப்பறையக் கொடுக்கனும்னு ஆசை....

அதுக்குனே வந்தது மாமா கல்யாணம்.வீட்ல எல்லாரும் பட்டுல பளபளன்னு ஜொலிச்சாங்க... நம்ம பாப்பாவும் தான்.... வீட்டுல இருந்து மண்டபம் போறவரைக்கும் ஒரு பிரச்சனையும் வரல... அங்க போனதுக்கப்புறம் தான் ஆரம்பிச்சது நம்ம பாப்பாவோட லீலைகள். பாப்பாவோட அம்மா கல்யாண பொண்ணை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு பொண்ணு ரூம்க்கு போனாங்க... கூடயே போன பாப்பாக்கு அங்க போனதும் திரும்ப மேக்கப் போடணும்னு தோணிடுச்சு.

அங்க விட்டா தான் கொஞ்சம் நிம்மதியா எல்லா சொந்தத்தையும் பாத்து ஒரு ஹாய் சொல்லிடலாம்னு பாப்பாவை விட்டுட்டு அம்மா எஸ்கேப். பாப்பாக்கு காவலா தன்னோட அக்கா பொண்ணை விட்டுட்டு போனாங்க....
கொஞ்ச நேரம் ஆகியும் நமக்கு இன்னும் மேக்கப் போடலியேன்னு பாப்பாக்கு டென்சன் ஆரம்பிச்சுடுச்சி.... பியூட்டீசியனை பாத்து "எப்போ எனக்கு மேக்கப் போடுவீங்க ஆன்டி" என்றாள். பியூட்டீசியனும் பொறுமையாக,"கல்யாண பொண்ணுக்கு முடிச்சிட்டு உனக்குதான் கண்ணா" என்றார்
ஒரு வழியாக பாப்பாவுக்கு மேக்கப் போடும் நேரம் வந்தது. பாப்பாவும் ரொம்ப ஆர்வமாக முகத்தை கொடுத்தால் 2 நிமிடத்தில் கண்மையும் லிப்ஸ்டிக்கும் போட்டு விட்டு அவ்வளவுதான் முடிந்தது என்றதும், வந்ததே பாப்பாவுக்கு கோவம். கல்யாண பொண்ணை காட்டி "அந்த ஆன்டிக்கு எவ்ளோ நேரம் மேக்கப் போட்டீங்க?? எனக்கும் அவ்ளோ நேரம் போடணும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பியூட்டீசியன் நம் பாப்பாவைப் பற்றி தெரியாமல், "கண்ணா அவங்க கல்யாண பொண்ணு அதனால அவ்ளோ நேரம், நீ கல்யாண பொண்ணு ஆகும்போது ஆன்டி உனக்கும் அது மாதிரி பண்ணுறேன்" என்று சொல்லிவிட்டு, ஏதோ சாமர்த்தியமா பேசிட்டதா நெனச்சிகிட்டு கெளம்பிட்டாங்க...

கோவத்தோட மாமாகிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ண கிளம்பிட்டாங்க நம்ம பாப்ஸ். கல்யாண கோலத்துல பொண்ணுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த மாமாக்கு டென்சன்ல பாப்ஸ் சொன்ன பாதி புரியல... இருந்தாலும் சமாளிக்க பியூட்டீசியன் சொன்ன தீர்ப்பயே இவரும் சொல்லி பக்கத்துல உக்கார வச்சிட்டார்.
பொண்ண காணோமேன்னு தேடி வந்த அம்மாக்கு, தன் தம்பி பக்கத்துல பாத்ததும்மயக்கம் வராத கொற தான். இனி என்ன பிரச்சனை வரப்போகுதோ ஆண்டவா....
ஆனால் பாப்பா ரொம்ப அமைதியா உக்காந்திருந்தா.... உண்மையில அவ மனசுல மேக்கப் மட்டும் தான் ஓடிகிட்டு இருந்தது..... திடீர்னு ஒரு பல்பு எரிஞ்சது பாப்பா மண்டையில....

அய்யர்: கல்யாண பொண்ண அழைச்சிட்டு வாங்கோ....

பாப்பா மாமாவை கூப்பிட்டு ஒன்று சொன்னாள், அவருக்கு தலையே சுற்றி விட்டது....நடந்து வந்த பொண்ணு கூட அவரு கண்ணுல தெரியல.

பாப்பா: மாமா நானே இன்னைக்கு கல்யாண பொண்ணா இருக்கேனே....





நம்ம பாப்பா ரொம்ப கூலா அய்யர்கிட்ட "நான் தான் கல்யாணபொண்ணு " என்றாள்

பி.கு1: தலைப்பை பாத்து இத படிச்சிட்டு உங்க பாப்பாக்கு கதை சொல்லலாம்னு நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்ல...

பி.கு2: கடைசியில என்னதான் நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்களுக்கு, கல்யாணம் ஒரு வழியா பாப்பாவை மேக்கப் போட அனுப்புனதும் நல்லா நடந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு பாப்பாவ எந்த கல்யாணத்துக்கும் அவங்க அம்மா கூட கூட்டிட்டு போறதில்லன்னு கேள்வி...